மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் |
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மெரினா கடற்கரையில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த போராட்டம் வெற்றி அடைந்தாலும், வன்முறையில் முடிந்தது. இந்த போராட்டத்தை மையப்படுத்தி மெரினா புரட்சி என்ற படம் தயாராகி உள்ளது. இதனை எஸ்.எஸ்.ராஜ் இயக்கி உள்ளார். மெரினா போராட்டத்தில் கலந்து கொண்டவர்களே நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் முடிந்து தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், "இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புகிறோம், அவர்கள் பார்த்து முடிவு செய்வார்கள்" என்று கூறிவிட்டார்கள். என்ன காரணத்துக்காக தணிக்கை குழு அனுமதி தரவில்லை என்பதை கூற மறுத்துவிட்டனர். இதுகுறித்து படத்தின் தரப்பில் கூறப்படுவதாவது:
ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே படமாக்கி உள்ளோம். இதில் கற்பனை எதுவும் இல்லை. இந்த போராட்டத்தில் ஒரு பிரபல நடிகை, ஒரு அமைச்சர், ஒரு எம்.பியின் பங்கு வருகிறது. அதை காரணம் காட்டித்தான் தணிக்கை சான்றிதழ் தர மறுக்கிறார்கள். ஆனால் அதனை வெளிப்படையாக குறிப்பிடாமல் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி உள்ளனர். மறு தணிக்கையில் சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறோம். இன்னும் ஒரு வாரத்தில் மறுதணிக்கை குழுவினர் படத்தை பார்க்க இருக்கிறார்கள். என்றனர்.