ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் எழுமின். விவேக், தேவயானி முதன்மை ரோலில் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விவேக் பேசியதாவது :
பெற்றோர்கள் குழந்தைகளை அருகில் இருந்து கவனிக்க வேண்டும். செய்தித்தாள் படித்தேன், ஒரு தாயே தன் மகளை தவறாக பயன்படுத்தியது அதிர்ச்சியாக இருந்தது. இன்றைக்கு சமூகவலைதளங்களில் வரும் விஷயங்கள் பிரச்னையாக இருக்கிறது. அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.
பெண் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், தனிமையில் அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் அவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளிடம் நண்பர்களாக மாற வேண்டும். அப்போது தான் அவர்கள் உங்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றார்.