ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாடோடிகள் படத்திற்கு பிறகு சசிகுமாருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சுந்தர பாண்டியன் தான். அவருக்கு மட்டுமல்ல அந்தபடத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனையும் நன்கு வெளிச்சம் போட்டு காட்டியது.. ஆனால் அதன் பின் எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்சனில் வெளியான இது கதிர்வேலன் காதல், சத்ரியன் இரண்டும் பெரிய அளவில் போகவில்லை.
இந்தநிலையில் சசிகுமாரும் எஸ்.ஆர்.பிரபாகரனும் தற்போது மீண்டும் 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்கிற படத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான டைட்டில் போஸ்டர் சமீபத்தில் சூர்யாவால் வெளியிடப்பட்டது. தற்போது இந்தப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஜுங்கா ரிலீசை தொடார்ந்து தமிழ், மலையாளம் எதிலும் படவாய்ப்புகள் இல்லாத மடோனா, கன்னடத்தில் கோட்டிகோபாலு-2 என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.