அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
பிரபல பாலிவுட் நடிகை அதிதிராவ். இவர் அறிமுமானது சிருங்காரம் என்ற தமிழ் படத்தில், அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்தார். காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகைகள் பாலியல் அத்துமீறல்களை தைரியமாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்கும் நேரம். அதிதியும் தன் பங்கிற்கு பட வாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
புதிதாக சினிமா துறைக்கு வந்து கொள்கையுடன் செயல்படுவது கஷ்டம், ஆனால் முடியாத காரியம் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம். நான் நடிக்க வந்த புதிதில் ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. படுக்கைக்கு வந்தால்தான் பட வாய்ப்பு என்கிற நிலை எனக்கு 3 படங்களில் ஏற்பட்டது. அதற்கு மறுத்து அதில் இருந்து வெளியே வந்துவிட்டேன். எனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். அதனால் பட வாய்ப்புகளை இழந்தாலும் பரவாயில்லை.
சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடம் என்று பொதுவாக கூற முடியாது. சினிமா துறை மட்டும் அல்ல பிற துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். சிலர் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். சிலர் பெண்களிடம் சில்மிஷம் செய்வார்கள். ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் முன்னேறுவது கடினம். என்கிறார் அதிதிராவ்.