டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் நடிகர் மன்சூரலிகான். சமீபகாலமாக அரசியல் தொடர்பான விவகாரமான கருத்துக்களை சொல்லி சர்ச்சைகளில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், தற்போது மன்சூரலிகானின் மூன்றாவது மனைவியான வஹிதா என்பவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், மன்சூரலிகானின் இரண்டாவது மனைவி ஹமீதாவின் 22 வயது மகள் லைலா அலிகான், 15 வயது மகன் மீரான் அலிகான், இருவரும் இணைந்து மன்சூரலிகானின் மூன்றாவது மனைவியான வஹிதா என்ற என்னை இரும்புக் கம்பியால் தாக்கினார்கள். அந்த தாக்குதல் நடந்தபோது மன்சூரலிகானும், ஹமீதாவும் அருகில் இருந்தும் தடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்சூரலிகானின் இரண்டாவது மனைவி ஹமீதாவாவின் வாரிசுகளால் தாக்கப்பட்ட மூன்றாவது மனைவி வஹிதா, தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.