பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சினிமாவின் டாப் 10 படங்களில் ஒன்று உதிரிப்பூக்கள். இந்தப் படத்தில் நடித்தவர் கன்னடத்தை சேர்ந்த அஸ்வினி. அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். ஒரு சில கன்னடப் படங்களில் நடித்தவர், கன்னட இயக்குனர் டி.எஸ்.ரங்காவை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது பெங்களூரில் மகள் வீட்டில் பேரன் பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
அண்மையில் சென்னை வந்த அஸ்வினி. தன்னை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், தனது குருவுமான மகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து அவர் கூறும்போது "சென்னைக்கு ஒரு வேலைகயாக வந்தேன். மகேந்திரன் சாரை பார்க்க வேண்டும்போல இருந்தது. என்னை குருவாக இருந்து நல்ல நடிகையாக மாற்றியவர் அவர். குடும்பத்திற்காக நடிப்பில் இருந்து விலகினேன். நல்ல கதைகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றிய யோசிப்பேன்" என்றார்.