மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தமிழ்த் திரையுலகத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார் சிம்பு. இந்தப் படத்தில் அவர் நேரம் தவறாமல் வந்து நடித்துக் கொடுத்த விதம் படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது சுந்தர் .சி இயக்கத்தில் 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்க உள்ளார்.
'செக்கச் சிவந்த வானம்' படம் தெலுங்கில் 'நவாப்' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார். அதில், “நவாப்' படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது. உங்கள் ஆதரவு எனக்குக் கிடைத்துள்ளது. என்னுடைய நடிப்பை வரவேற்ற அனைவருக்கும் நன்றி. 'நவாப்' படத்திற்காக படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. தமிழ்நாடு, ஆந்திரா என பல இடங்களில் படம் வெற்றி பெற்றுள்ளது. எனக்கு நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க ஆசை. விரைவில் ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பேன்,” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு நடித்து தமிழில் வெளிவந்து தெலுங்கில் டப்பிங் ஆன 'மன்மதா, வல்லபா, சரடுடு' ஆகிய படங்கள் அவருக்கு அங்கு புகழைத் தேடித் தந்தன.