'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டில்லியை சேர்ந்த இளம் பெண் லட்சுமி அகர்வால். இவரை ஒரு இளைஞர் ஒரு தலையாய் காதலித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். 15 வயது சிறுமியாக இருந்த லட்சுமி அதற்கு மறுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவர் முகத்தில் ஆசிட் வீசினார். இதனால் முகம் விகாரமான லட்சுமி தனது அழகை இழந்தார்.
இதனால் மனம் தளராமல் அந்த முகத்துடனேயே வாழத் துணிந்தார். தனது தாக்குதலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்பட்டார். அதோடு ஆசிட் விற்பனைக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது லட்சுமி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்காக பாடுபட்டு வருகிறார். அசோக் தீட்சித் என்பவரை மணந்து அழகான குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒமாமா மனைவி லட்சுமியை அமெரிக்காவிற்கு அழைத்து பாராட்டினார். பல்வேறு விருதுகளும் லட்சுமிக்கு குவிந்தது.
இந்த லட்சுமியின் கதை சினிமாவாகிறது. இதில் லட்சுமியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்குகிறார். தீபிகா படுகோனேவே தயாரிக்கிறார். தற்போது இதன் ஸ்கிரிப்டை மேக்னா குல்சார் எழுதி வருகிறார். அது லட்சுமிடம் கொடுக்கப்பட்டு அவர் ஒப்புதல் கொடுத்ததும் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.