தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலச்சந்தர், பாரதிராஜா இணைந்து நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர் எழுத்தளார் தாமிரா. தற்போது, அவர் இயக்கி உள்ள படம் ஆண்தேவதை. இதில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, சுஜா வாருணி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிகரம் சினிமா சார்பில் பக்ருதீன் சேக் தாவூத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் தயாராகி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் சரியான தியேட்டர் கிடைக்காமல் படம் தள்ளிப்போய் கொண்டே வருகிறது. நேற்று (5ந் தேதி) இந்தப் படம் வெளிவருவதாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் வெளிவரவில்லை. இதுகுறித்த தனது வேதனையை இயக்குனர் தாமிரா தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஆண் தேவதை வெளியாகி இருக்க வேண்டியது. மீண்டும் தள்ளிப்போகிறது. ஒரு நல்ல திரைப்படம் நிச்சயம் வெற்றி பெரும் என்கிற நிறைந்த நம்பிக்கை இருக்கிறது. ஆயினும் இந்த நாளைக் கடப்பது கடினமாக இருக்கிறது. காலம் என்ன கணக்கு வைத்திருக்கிறது என்று புரியவில்லை.
கூண்டில் அடைப்பட்ட பறவை போலிருக்கிறான் ஆண் தேவதை. யார் குற்றமெனத் தெரியவில்லை. வறியவன் தோளில் ஏறி வலியவன் வானம் தொடுவது எங்கும் தவிர்க்க இயலாத வர்க்க பேதம் தான் இங்கும் அதுவே நிகழ்கிறது. தோல்விப் படங்கள் அரங்கில் குடி கொண்டிருக்கிறது. நல்ல திரைப்படங்களுக்கு அரங்கங்கள் கிடைப்பதில்லை. இந்நிலை மாறும் என்கிற மன உறுதியோடு மீண்டும் அக்டோபர் பன்ணிரண்டாம் தேதி ஆண் தேவதை வெளியீட்டு தேதியாக அறிவித்திருக்கிறோம். காத்திருங்கள் வருவோம்... வெல்வோம்... இவ்வாறு தாமிரா கூறியிருக்கிறார்.