இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த வாரம் லைகா தயாரிப்பில் மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்' மற்றும் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாகின.
இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரண்டும் வெற்றிப்படங்களாக அமைந்தன.
இவற்றில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'செக்கச்சிவந்த வானம்' படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.
அதேநேரம் நவாப் என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்தப்படத்துக்கு அங்கே எதிர்பார்த்த வரவேற்பும், வெற்றியும் கிடைக்கவில்லை. இப்படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸை 5 கோடிக்கு வாங்கி சில கோடிகள் பிரிண்ட் அண்ட் பப்ளிசிட்டிக்கு செலவு செய்து படத்தை வெளியிட்டனர்.
ஆந்திர ரசிகர்கள் இப்படத்தை ரசிக்கவில்லை. எனவே நவாப் படத்தை வாங்கியவருக்கு ரூ.5 கோடிக்கு மேல் நஷ்டம் வரும் என்று சொல்லப்படுகிறது.