ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அக்டோபர் 5 ஆம் தேதி ஆண்தேவதை மற்றும் எழுமின் படங்கள் வெளியாவதாக இருந்தன. கவுன்சிலின் அனுமதியில்லாமல் திடீரென நோட்டா படம் வெளியானதால் அந்த இரண்டு படங்களுக்கும் தியேட்டர் கிடைக்கவில்லை. அதனால் ஆண்தேவதை, எழுமின் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டன.
அக்டோபர் 17-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை', 18-ம் தேதி லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த 'சண்டக்கோழி 2', 'திருப்பதிசாமி குடும்பம்', 'அண்டாவ காணோம்', 'எழுமீன்' ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
அக்டோபர் 17, 18 அன்று வட சென்னை, சண்டக்கோழி-2 ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை வெளியிட்டால், மற்ற சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. எனவே இருவரில் யாராவது ஒருவர் உங்களுடைய படத்தை தள்ளி வையுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
இதற்கு விஷால், தனுஷ் இரண்டு பேருமே மறுத்துவிட்டனர். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ சின்ன படத்தயாரிப்பாளர்கள் தான்.