மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டு வாய்ப்பு தராமல் தன்னை ஏமாற்றிவிட்டனர் என தெலுங்கு சினிமாவில் புயலை கிளப்பினார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் முருகதாஸ், ஸ்ரீகாந்த், லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டார்.
தெலுங்கு சினிமா தனக்கு கை கொடுக்காத நிலையில் தமிழ்நாட்டில் என்ட்ரியானார். தற்போது ஸ்ரீரெட்டி டைரி என்ற பெயரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னையிலேயே குடியேறி விட்டார் ஸ்ரீரெட்டி. இன்று தனது வீட்டிற்கு பால் காய்ச்சி, பசு மாடு, கன்றுக்கு பூஜை செய்து குடியேறி உள்ளார். இதை தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீரெட்டியிடம் கேட்டபோது, சொந்தமாக வீடு வாங்கவில்லை. வாடகைக்கு தான் வசிக்கிறேன். முதன்முதலில் சென்னையில் குடியேறுவதால் பால் காய்ச்சி முறையாக சென்றேன். தற்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன், இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் விஷாலை சந்தித்து உதவி கோர உள்ளேன். தமிழக மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் என்றார்.