ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எந்த ஹீரோயினையும் குறைவாக மதிப்பிட கூடாது என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானபோது ரசிகர்களின் வரவேற்பை பெறாத இவர், இப்போது காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாத குறையாக பரபரப்பாக படப்பிடிப்புகளில் நடித்து வருகிறார்.
தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் அரவிந்த சமேத படத்தை முடித்த கையோடு இந்தியில் உருவாகும் 'ஹவுஸ்புல்-4' படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்சல்மர் பறந்துவிட்டார். இதை முடித்துவிட்டு பிரபாஸின் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனால் 'அரவிந்த சமேத' படத்தின் புரமோஷன் நிகழ்சிகள் எதிலும் பூஜா ஹெக்டே கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரம் இருவரிடமும் மனிப்பு கேட்டுக்கொண்டுள்ளார் பூஜா ஹெக்டே.