தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படங்களில் நடித்துள்ளார். எந்தப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இந்நிலையில், விஜய் டிவியில் கமல் நடத்திய பிக்பாஸ் சீசன்-2வில் கலந்து கொண்டார். தமிழ் சரியாக தெரியவில்லை என்றபோதும் தனக்குத் தெரிந்த தமிழில் பேசிய ஐஸஸ்வர்யா தத்தா, சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியவர். போட்டியின் இறுதிபோட்டி வரை வந்தார். மெட்ராஸ் ரித்விகா அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த நிலையில், இரண்டாமிடத்தை ஐஸ்வர்யா பிடித்தார்.
இந்நிலையில், அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், உலகம் முழுவதிலும் இருந்து என் மீது அன்பும், ஆதரவும் காண்பித்த தமிழ் மக்களுக்கு நன்றி. நன்றி என்பது ரொம்ப சின்ன வார்த்தை. பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை நான் காயப்படுத்தியிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்தவில்லை என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
Love you all from the bottom of my heart 😘😘💋💋 Thanks for showering your love and support towards me💕 pic.twitter.com/kTaWHHsk8s
— Aishwarya Dutta (@AishwaryaaDutta) October 3, 2018