தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒவ்வொரு வருடமும் எண்ணற்ற புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அறிமுகமாகும் இயக்குனர்களில் ஒரு சிலர் மட்டுமே அவர்களது படைப்புகளால் பெரிதும் பேசப்படுகிறார்கள். அந்த விதத்தில் இந்த வருடத்தில் அடுத்தடுத்து மூன்று மாதங்களில், மூன்று அறிமுக இயக்குனர்களின் படங்கள் அதிகம் பேசப்படுகின்றன.
அறிமுக இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் ஆகஸ்ட் 24ம் தேதி வெளிவந்த 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஒரு இயல்பான வாழ்வியல் படமாக அமைந்து விமர்சகர்களால், ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. ஆனால், இந்தப் படத்திற்கு பெரிய அளவில் வசூல் வரவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். இம்மாதிரியான படங்களுக்கு இன்னும் அதிகமான ஆதரவு கிடைத்தால்தான் இது போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவரும்.
அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் செப்டம்பர் 28ம் தேதி வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' படம் ஒடுக்கப்பட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே பதிவு செய்த படமாக அமைந்து பலரது பாராட்டுக்களைப் பெற்றது. இப்படத்திற்கும் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என படக்குழுவினர் குற்றம் சாட்டினாலும், படத்திற்கான வசூல் இதுவரை நிறைவாகவே உள்ளது.
அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நாளை மறுநாள் அக்டோபர் 4ம் தேதி வெளியாக உள்ள படம் '96'. படம் வெளிவருவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே படத்தை பத்திரிகையாளர்களுக்குத் திரையிட்டதிலிருந்தே படத்தின் மீது படக்குழுவினருக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மூன்று படங்களுமே இப்போது மட்டுமில்லை, இந்த 2018ம் ஆண்டின் முடிவிலும், இனி வரும் காலங்களிலும், பலராலும் குறிப்பிடப்பட்டு பேசப்படும் படங்களாக இருக்கும் என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.