தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற இரண்டு அரசியல் வசனங்களுக்கே படத்தைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்தது. அந்த ஒரு பரபரப்பாலேயே படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று வசூலை அள்ளியது. அப்படி ஒரு சர்ச்சை எழாமல் இருந்திருந்தால் அந்தப் படம் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றிருக்கும் என்று அப்போதே சொன்னார்கள்.
அதனால்தானோ என்னவோ, 'சர்கார்' படத்தில் மெர்சலான அரசியல் இருக்கிறது என்று பட வெளியீட்டிற்கு முன்பே அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் 'சர்கார்' நாயகன் விஜய். நேற்று நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சில் அரசியல்தான் அதிகம் இருந்தது. அரசாங்கம், ஊழல், நல்லாட்சி என்று பேசி அவர் அரசியலில் இறங்குவது பற்றியும் பேசினார்.
விஜய் அமைதியாக இருந்தாலே அவரது படத்திற்கு ஏதாவது பிரச்னைகளும் எழும். இப்போது அரசியல் கட்சிகளை உசுப்பேற்றும் அளவிற்கு இருக்கும் அவரது அரசியல் பேச்சு, சர்கார் படத்திற்கு ஏதேனும் சிக்கலை உண்டாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தெரிவிக்கிறார்கள். என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.