அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்தியத் திரையுலகத்தில் மணிரத்னம் என்று சொன்னாலே ஒரு பிரமிப்பு இருக்கும். அந்த அளவிற்கு பல மாறுபட்ட படங்களைக் கொடுத்தவர். கடந்த சில ஆண்டுகளாக அவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள், ரசிகர்களுக்கு முழு திருப்தியைத் தரவில்லை. கடந்த வாரம் அவரது இயக்கத்தில் வெளிவந்த 'செக்கச் சிவந்த வானம்' படம் அந்தக் குறையைப் போக்கிவிட்டது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, படத்தைப் பார்த்து பயங்கரமாகவே பாராட்டித் தள்ளியிருக்கிறார். “செக்கச் சிவந்த வானம், பிரமாதமான நடிப்பு, ஏஆர் ரகுமான் ஈடு இணையேயில்லை. சந்தோஷ் சிவன் உண்மையாகவே கிளாஸ். மணிரத்தினத்தின் ரசிகனாக, சென்னை தியேட்டர்களில் அவருடைய படங்களைப் பார்த்து கைதட்டியவன், எனது வீட்டு ஹோம் தியேட்டரில் அதையே செய்தேன்.
படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் போய் உடனே உங்களது டிக்கெட்டை வாங்குங்கள். ஒரு கிளாசிக் படத்திற்கு சான்றாக இருப்போம். இந்த பத்தாண்டின் சிறந்த படம். மாஸ்டர் எப்படி திரும்பி வந்திருக்கிறார் தெரியுமா,” என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் மகேஷ் பாபு.