ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் பரியேறும் பெருமாள். இந்தப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு, வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து திரையுலகினர் பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர் விஜய்யும் கதிரை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார். அதோடு, எல்லோரும் பரியேறும் பெருமாளைப்பற்றியும், உங்கள் நடிப்பையும் பெருமையாக பேசுகிறார்கள். வாழ்த்துக்கள் என்று கூறியவர், நான் இன்னும் படம் பார்க்கவில்லை. விரைவிலேயே படத்தை பார்த்து விட்டு என் கருத்தை சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே பாராட்டு மழையில் நீந்திக்கொண்டு வரும் கதிருக்கு விஜய்யின் இந்த பாராட்டு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.