டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சித்து பிளஸ்-2 சாந்தினி மார்க்கெட்டில் பெரிய இடத்தை பிடிக்கவில்லை என்றபோதும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதோடு, பல நாயகிகளில் இருக்கும் படங்களிலும் நடிக்கிறார்.
இதுபற்றி சாந்தினி கூறுகையில், நான் சினிமாவில் பெரிய கதாநாயகியாக வேண்டும் என்றுதான் வந் தேன். ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. எனக்கு பிறகு என்ட்ரியான நடிகைகள் பலர் முன்னணி நடிகையாகிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனபோதும், யார் மீதும் எனக்கு ஈகோ இல்லை. எனக்கு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறேன். அதேசமயம், படத்தில் நான்கு காட்சிகளில் வந்தாலும் என் கேரக்டர் பேசப்படும்படியாக இருக்க வேண் டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதனால்தான், பல நாயகிகள் நடிக்கும் படங்களிலும் நான் நடிக்கிறேன். அவர்களுக்கு என்னை விட பெரிய வேடமாக இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எனக்கு கிடைத்த கேரக்டரில் நல்ல பர்பாமென்ஸை வெளிப்படுத்தி பெயர் வாங்க வேண்டும் என்பதிலேயே எனது கவனம் உள்ளது என்கிறார் சாந்தினி.