'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஓ காதல் கண்மணி, மெர்சல் படங்களில் நடிப்பதற்கு முன்பே நடிகை ஸ்ரீபிரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் நித்யாமேனன். அதையடுத்து தற்போது பிராணா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யாமேனன் மட்டுமே ஒரேயொரு கேரக்டரில் படம் முழுக்க நடித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்திருப்பவர், தமிழில் மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்திலும் ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார். அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான த அயர்ன் லேடி படத்திலும் ஜெயலலிதாவாக நடிக்கிறார் நித்யாமேனன்.
ஆக, ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனன் நடிப்பதாக செய்திகள் வெளியானதில் இருந்து, இப்போது அதிரடியான கதையின் நாயகிக்கான கதைகள் வைத்திருக்கும் டைரக்டர்களும் நித்யா மேனனை சந்தித்து கதை சொல்லி வருகிறார்களாம்.
அந்த வகையில், கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, த்ரிஷா போன்ற நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பரபரப்பான கதையின் நாயகியாகியிருக்கிறார் நித்யா மேனன்.