ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஆரம்பத்தில் தமிழ் சினிமா பக்கம் அவ்வளவாக ஆர்வம் காட்டாத மலையாள நடிகர் பஹத் பாசில், கடந்த ஆண்டு வெளியான 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதேசமயம் அவராகவே வேண்டாம் என விலகிய மணிரத்னம் படமான செக்க சிவந்த வானம் இன்று வெளியாகியுள்ளது.
இருந்தாலும் மலையாளத்தில் தனது 'வரதன்' படம் வெளியாகி ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறார் பஹத் பாசில். இந்தநிலையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'சூடானி ப்ரம் நைஜீரியா மற்றும் அருவி ஆகிய படங்களை பார்த்தபிறகு, அவற்றில் தன்னுடைய பங்களிப்பும் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார் பஹத் பாசில்.