பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதரி, டயானா எரப்பா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்து இன்று வெளிவந்துள்ள படம் 'செக்கச் சிவந்த வானம்'. மனிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் தோல்வியடைந்ததால் அவருடைய அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
அடுத்த படம் மல்டி ஸ்டார் படம் என்றதும் அது இன்னும் அதிகமானது. முதல் முறையாக அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என நாயகர்களும், மற்ற நாயகிகளும் முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதால் இது என்ன மாதிரியான படமாக இருக்கும் எனப் பலரும் ஜோசியம் சொன்னார்கள். இது தொழிலாளர்களைப் பற்றிய கதை, மக்கள் பிரச்சினையைப் பேசும் படம் என்றெல்லாம் அளந்துவிட்டார்கள். ஆனால், படம் வந்தபின் பார்த்தால் பக்கா கேங்ஸ்டர் படமாக இருக்கிறது.
இன்று அதிகாலை காட்சியாக பல தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இன்று பெரும்பாலான தியேட்டர்களில் இப்படத்தின் இருக்கைகள் 98 சதவீதம் வரை நிரம்பியுள்ளன. அடுத்த நான்கு நாட்களுக்கு அதே நிலைமை நீடிப்பதால் படத்திற்கான வரவேற்பு முன்பின் இருந்தாலும் படம் தப்பித்துவிடும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வியாபார ரீதியாக இந்த 'வானம்' பச்சையாக மாறும் என்கிறார்கள்.