பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில், குத்து ரம்யா என்ற பெயரில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் தனது சொந்த மொழியான கன்னடத்தில் நடித்தார். கர்நாடக முன்னாள் முதல்வர் கிருஷ்ணா இவரது உறவினர். அதன் மூலம் இவரும் அரசியலில் குதித்தார். பார்லிமென்ட் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாகவும் ஆனார். தற்போது காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவராக இருக்கிறார்.
திவ்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையான வார்த்தைகளால் அவதூறு செய்து வருவதாக அவர் மீது லக்னோவில் உள்ள கோமதி நகர் காவல் நிலையத்தில் ரிஸ்வான் அகமது என்ற வக்கில் புகார் கொடுத்துள்ளார். இந்த மனுவை கொண்டு போலீசார் திவ்யா மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.