இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் நடித்த மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதியவர் பாடலாசிரியர் விவேக். அதையடுத்து தற்போது விஜய் நடித்துள்ள சர்கார் படத்திலும் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
சர்கார் படத்தின் சிம்டாங்காரன் என்ற பாடலை விவேக் தான் எழுதியிருக்கிறார். இந்த பாடலில் இடம்பெற்றிருக்கும் சிம்டாங்காரன் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியாமல் பலரும் குழம்பினார்கள்.
இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில், சிம்டாங்காரன் என்றால், கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன். கண் சிமிட்டாமல் சிலரை பார்க்க தோனுமே... அந்த ஒருவன் நம் சிம்டாங்காரன் என பதிவிட்டிருக்கிறார்.