தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருமணம் ஆன பின் நடிகைகளின் இமேஜ் அவ்வளவுதான் என்று சில காலம் முன்பு வரை இருந்தது. திருமணத்திற்கும் இமேஜிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உடைத்ததில் சமந்தாவுக்கு முக்கியப் பங்குண்டு. திருமணம் செய்து கொண்டபின் அவர் நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த படங்கள் வெற்றி பெற்று அவருடைய இமேஜை இன்னும் அதிகரித்துள்ளன.
ஆனால், சமந்தா அவருடைய இமேஜை அவரே குறைத்துக் கொள்வார் போலத் தெரிகிறது. தற்போது கணவருடன் வெளிநாட்டில் விடுமுறையில் இருக்கும் சமந்தா ஒரு கிளாமரான போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த போட்டோவிற்கான லைக்குகுள் 7 லட்சத்தைத் தொட்டு உள்ளன.
திருமணம் முடிந்த பின் இந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என பல ரசிகர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர் புகுந்த வீட்டின் பெருமையைக் கருத்தில் கொண்டாவது அவர் இதைச் செய்ய வேண்டும் என்றும் தெலுங்குத் திரையுலகத்தில் சிலர் கிசுகிசுக்கின்றனர். அதை சமந்தா ஏற்றுக் கொண்டு, இனிமேலாவது இப்படிப்பட்ட புகைப்படங்களைப் பகிர்வதை தவிர்ப்பாரா ?.