அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கபாலி, காலா என பா.ரஞ்சித் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்த ரஜினி, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினி மேலும் சில இளவட்ட டைரக்டர்களின் படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளார் என்றொரு செய்தியும். இல்லை பேட்ட படத்தை முடித்ததும் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்று இன்னொரு செய்தியும் கோலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த நேரத்தில், பேட்ட படத்தை முடித்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிப்பதாக தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. விஜய் நடித்துள்ள சர்கார் படத்தை இயக்கியுள்ள முருகதாஸ், தீபாவளிக்கு அப்படம் வெளியானதும் ரஜினி நடிக்கும் படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்குகிறாராம். இந்த படம் இந்திய அளவிலான ஒரு மெகா அரசியலை மையமாகக்கொண்ட கதையில் உருவாகிறதாம்.