வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
சின்னத்திரை நடிகை நிலானி சமீபகாலமாக பரபரப்பு வளையத்திற்குள் நிற்கிறார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து போலீஸ் உடையில் இவர் போலீசுக்கு எதிராக பேசியது வைரல் ஆனது. அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
சில நாட்கள் அமைதியாக இருந்த அவர் மீண்டும் வைரல் ஆனார். அவரது காதலன் காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி டார்ச்சர் செய்வதாக போலீசில் புகார் அளித்தார். இதனால் மனம் உடைந்த காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் நிலானி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பத்திரிகையாளர்களை தனது வீட்டுக்கு அழைத்த நிலானி, அங்கு பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். தகவல் அறிந்து உடனடியாக அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நிலானி மீது 3வது வழக்காக தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யதுள்ளனர். நிலானிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.