ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படம், அடுத்த வாரம் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக இத்தனை ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் இவர்கள் நான்கு பேரும் தான் இந்தப் படத்தின் ஹீரோக்கள். படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது அரவிந்த்சாமி மூத்த அண்ணன், அவருக்கு அடுத்து அருண் விஜய், சிம்பு ஆகியோர் போலத் தெரிகிறது. விஜய் சேதுபதி அரவிந்த்சாமியின் நண்பராக, போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இன்று வெளியாகியுள்ள இரண்டாவது டிரைலரில் பெரியவரு போயிட்டாருன்னா யாருக்குப் பெரிய லாபம் என சிம்பு கேட்கிறார். அரவிந்த்சாமியிடம் ஒரு பெண் சேனாபதிக்கு அடுத்த வாரிசு வரதராஜன்தானா, உன் தம்பிங்க எனக் கேட்கிறார். அடுத்த காட்சியில் அரவிந்த்சாமி, தியாகுவும், வைத்தியும், ரொம்பவே கேர்புல்லா இருக்கணும்,” என்கிறார். பின்னர் சிம்பு, டேய், அண்ணா இதை ஆரம்பிச்சி வச்சது நீ மறந்துடாத,” என்று எச்சரிக்கிறார்.
துப்பாக்கி, ரத்தம், அடிதடி என பெயருக்கு ஏற்பவே சிவந்த மாதிரி இருக்கும் இரண்டாவது டிரைலரின் காட்சிகள், இந்தப் படத்தில் யாருக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என்ற ஆவலை இப்போதே தூண்டியுள்ளது. சேனாபதிக்குப் பின் யார் வாரிசு ?, இதுதான் செக்கச் சிவந்த வானம் ?.