டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை 2. இதனை காமெடி நடிகர் மனோபாலா தயாரித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு மனோபாலா 1 கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். இந்த பாக்கியை வசூலித்து தரும்படி அரவிந்த்சாமி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மனோபாலா, படம் வெளியீட்டுக்கு முன்பு சம்பள பாக்கியை கொடுத்து விடுவதாகவும் முதல்கட்டமாக அக்டோபர் 10ம் தேதிக்குள் 25 லட்சம் கொடுப்பதாகவும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் படத்தை வெளியிட மாட்டேன். என்று உத்தரவாதம் அளித்தார்.
மனோபாலாவின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அக்டோபர் 12ந் தேதி, இருதரப்பினரும் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் சம்பள பிரச்சினை பற்றி பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.