டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காமெடி நடிகரான அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப்படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார். அதன்பிறகு மன்னாரு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு வாழ்க விவசாயி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். இவர்களுடன் முத்துராமன், ஹலோகந்தசாமி, ஸ்ரீகல்கி, கவிஞர் விக்ரமாதித்யன் ஆகியோரும் நடிக்கிறார்கள். பி.எல்.பொன்னி மோகன் இயக்குகிறார். ஜெய் கிருஷ் இசை அமைக்கிறார். இரதன் சந்தாவத் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும், இயக்குனருமான சசிகுமார் வெளியிட்டார். படம் குறித்து அப்புக்குட்டி கூறியதாவது: இந்த படத்தில் கதைதான் ஹீரோ. நான் ஹீரோ இல்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டம் நிறைந்த ஒரு விவசாயியாக நடிக்கிறேன். என்றார்.
இயக்குனர் பி.எல்.பொன்னிமோகன் கூறியதாவது: நீரின்றி, உணவின்றி, தொழில் இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவிக்கும் விவசாயிகள் பிரச்னையை மையப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள படம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார்களின் கதை. சமீபகாலமாக விவசாயிகள் படும் துன்பத்தையும், துயரத்தையும், அவலத்தையும் படம் பிடித்துக் காட்டும். படப்பிடிப்பு, ராஜபாளையம், சொக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார விவசாய கிராமங்களில் நடைபெற்றுள்ளது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.