அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் வியந்து பார்க்கப்படும் ஒரு இயக்குனர் மணிரத்னம். அவருடைய படங்களின் கதைகள் நிஜ வாழ்க்கையிலிருந்தோ அல்லது சரித்திர காலக் கதைகளில் இருந்தோ தழுவி எடுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்றன. 'கர்ணன்' பற்றிய தழுவல்தான் 'தளபதி', பம்பாய் வரதராஜ முதலியார் பற்றிய தழுவல்தான் 'நாயகன்', ராமாயணத்தின் தழுவல்தான் 'ராவணன்' என சில பல உதாரணங்களைச் சொல்லலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளிவர உள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் கதை கூட கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்'ஐ தழுவி எடுக்கப்பட்டதுதான் என்று தற்போது பேச்சு எழுந்துள்ளது. குடும்பத்தின் மூத்தவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தின் தலைமை யார் என்பது குறித்து மகன்களுக்குள் எழும் போட்டிதான் 'செக்கச் சிவந்த வானம்' கதை என்கிறார்கள்.
'பொன்னியின் செல்வன்'ஐ சுருக்கித்தான் படத்தின் கதையையும், கதாபாத்திரங்களையும் மணிரத்னம் உருவாக்கியிருக்கிறார். 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்தவர்களுக்கு படம் வெளிவந்த பிறகு அது தெரியத்தான் போகிறது.