'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தாமிரா இயக்கி உள்ள படம் ஆண் தேவதை. சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி, மற்றும் காளி வெங்கட் நடித்துள்ளனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் 5ந் தேதி படம் வெளிவருகிறது. படத்தை தமிழ்நாட்டில் திரையிடும் உரிமத்தை விநியோகஸ்தர் மாரிமுத்து வாங்கியிருக்கிறார்.
படம் பற்றி தாமிரா கூறியதாவது: படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய பிரதிபலிப்பதாக இந்த ஆண் தேவதையை பார்க்கிறேன். இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றி, குறிப்பாக உலகமயமாக்கல், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி இந்த படம் பேசுகிறது.
ஒரு சினிமாவானது இரண்டு வழிகளில் வெற்றியை அடைகிறது. ஒன்று வெற்றிகரமான பார்முலாவில் பயணித்து எளிதாக வெற்றியை அடைகிறது. இன்னொன்று வழக்கத்துக்கு மாறான சினிமாவாக உருவாகி, முன்னோடியாக மாறுகிறது. ஆண் தேவதை வெற்றியை பெறுவதோடு, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட்செட்டர் படமாக அமையும் என நம்புகிறேன். படத்தை பார்த்தவுடன் மாரிமுத்து, நானே வெளியிடுகிறேன் என்று படத்தை வாங்கிக் கொண்டார் இதுவே படத்தின் முதல் வெற்றி. என்றார் தாமிரா.