விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான 16வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் நடக்கும் என்று தெரிகிறது. இந்த விழாவுக்கு தமிழக அரசு நிதி உதவி செய்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புயல், வெள்ள பாதிப்பு காரணமாக நிதி உதவி வழங்கவில்லை.
இந்த ஆண்டு 16வது சர்வதே திரைப்பட விழாவுக்கு முதல்வரை சிறப்பு விருந்தினராக அழைக்க விழாக்குழு முடிவு செய்தது. இதற்காக நேற்று விழாக் குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர். அப்போது விழாவுக்கு அழைப்பு விடுத்ததோடு நிதி தொடர்பான கோரிக்கையையும் வைத்தனர்.
இண்டோ சினி அப்ரிசேஷன் செயலாளரும், சர்வதேச பட விழா ஒருங்கிணைப்பாளருமான தங்கராஜ், நடிகர்கள் மோகன், மனோபாலா, கோபி கிருஷ்ணா, நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், குட்டிபத்மினி, லிஸி, சைலஜா ஆகியோர் முதல்வரை சந்தித்தனர். தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதல்வரும் உறுதி அளித்திருக்கிறார்.