தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லலித்குமார் நல்லவன் இல்லை; பல பெண்களை ஏமாற்றியுள்ளான் என, டிவி நடிகை நிலானி புகார் தெரிவித்துள்ளார்.
துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, போலீசாரை அவதுாறாக பேசி பிரபலமானவர் டிவி நடிகை நிலானி 36. வளசரவாக்கம், அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த இவர், ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் நடித்து வருகிறார். இவருடன் நெருங்கி பழகி வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் 33, நிலானியை திருமணம் செய்ய இருந்தார்.
ஆரம்பத்தில் சம்மதித்த நிலானி பின் மறுத்தார். அத்துடன் லலித்குமார் மீது காவல் நிலையத்திலம் புகார் கொடுத்தார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, தீக்குளித்து தற்கொலை செய்த லலித்குமார், சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து நிலானி கூறியதாவது:
இரண்டு குழந்தைகளோடு மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வீட்டருகே வசித்த காந்தி லலித் குமார் நண்பராக அறிமுகமானார். என் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு சென்று சேர்ப்பது உள்ளிட்ட வேலைகளில் அவரால் எனக்கு உதவிகள் கிடைத்தன. நான் கணவரை பிரிந்ததை அறிந்து, அவரும் தான் ஆதரவற்றவன் எனக்கூறி என்னுடன் பழகினார்.
என் குழந்தைகளின் பாதுகாப்புக்காக திருமணம் செய்ய முடிவு எடுத்தேன். ஆனால், லலித்குமாருடன் பழகிய சில மாதத்தில், அவருக்கு பல பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால் அவரிடம் இருந்து விலகினேன். வீட்டை விட்டு துரத்தினேன். குறும்படம் எடுப்பதாக கூறி, என்னுடன் நெருக்கமாக எடுத்த படங்களை, என் பேஸ்புக் முகவரியை திருடி, நான் போட்டது போலவே படங்களை பரப்பி, என் கணவர் போல் தன்னை அவர் வெளிப்படுத்திக் கொண்டார். ஒரு முறை என் அனுமதி இன்றி, வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றார். மனரீதியிலான தொல்லை அதிகரித்ததால் அவன் மீது புகார் கொடுத்தேன். போலீசார் அவனை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் துாத்துக்குடி சம்பவம் தொடர்பாக நான் பேசி கைதான போது ஜாமீனில் வெளியே எடுப்பது போன்ற பணிகளில் லலித்குமார் உதவி செய்ய வந்தான். மீண்டும் என்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினான். ஆனால், நான் மறுத்து விட்டேன். அவனுக்கு பல பெண்களோடு தொடர்பு இருக்கிறது. நந்தினி, சாந்தி, தனலட்சுமி என பல பெண்களை அவன் ஏமாற்றியுள்ளான். எனக்கும் லலித்குமாருக்கும் திருமணம் ஆகிவிட்டது எனக் கூறுவதில் உண்மை இல்லை. லலித்குமார் குறித்த உண்மை அவரது குடும்பத்திற்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.