'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். இதுதவிர காலேஜ் குமார், திருத்த நிர்கம்னா படங்களில் நடித்துள்ளார். தற்போது சம்யுக்தா பப்பி என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
ஒரு நாயை சுற்றி கதை நடக்கும். இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடிக்கிறார். காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் நட்டுதேவ் இயக்குகிறார். படத்தில் நடிப்பது பற்றி சம்யுக்தா கூறியதாவது:
தென்னிந்திய நடிகைகள் அனைவருக்கும் தமிழ் சினிமா ஒரு கனவுதான். எனக்கும் அந்த கனவு இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. நல்ல கதைக்காக காத்திருந்தேன். அது இப்போது கிடைத்திருக்கிறது. எனக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அன்பு அதிகம். இந்தப் படம் அதை மையப்படுத்தி உருவாவதில் மகிழ்ச்சி என்றார்.
ஹீரோ வருண் கூறியதாவது: பப்பி கதையை நான் கேட்டவுடனே தனிப்பட்ட முறையில் என்னை அந்த கதை ஈர்த்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையில் உள்ள உணர்ச்சி பிணைப்பை அந்த கதை பதிவு செய்கிறது. ஒரு ஹீரோவாக நான் அறிமுகமாக நிறைய அனுபவங்களை சேகரித்தேன். நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த இந்த படம் அனைத்து தரப்பையும் சென்றடையும். என்கிறார் வருண்.