இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சைமா என சுருக்கமாக சொல்லப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது. 2017ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களுக்கான 7வது சைமா திரைப்பட விருது விழா வருகிற செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகைகள் குஷ்பு, ராதிகா, கீர்த்தி சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழில் சிறந்த நடிகருக்கான விருது வேலைக்காரன் படத்துக்காக சிவகார்த்திகேயனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு உறுதியாக வருவதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் துபாய்க்கு வரவில்லை.
சைமா விருது விழாவுக்கு வருவதாக வாக்குக் கொடுத்துவிட்டு சிவகார்த்திகேயன் ஏன் போகவில்லை? சீமராஜா படம் ரிலீஸ் தொடர்பாக நிலவி வந்த பிரச்னை காரணமாக கடும் அப்செட்டாகிவிட்டராம் சிவகார்த்திகேயன். இந்த சூழலில் சைமா விருது விழாவுக்குப்போனால் தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்பதால் துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டாராம்.