மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கே.பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ்-2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடா போட்டு வந்த அவர், சமீபகாலமாக கதாபாத்திரங்களுக்கேற்ப இறங்கி வந்து நடித்து வருகிறார். அதோடு வெறும் மரத்தைச்சுற்றி டூயட் பாடும் வேடங்களாக இல்லாமல் வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிக்கிறார்.
இதுபற்றி சாந்தினி கூறுகையில், சினிமாவில் ரொமான்டிக் நாயகியாக வலம் வருவதை விட, பர்பாமென்ஸ் நாயகியாக இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கமாக உள்ளது. அதன் காரணமாகவே மாறுபட்ட வேடங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறேன். அந்த வகையில், வஞ்சகர் உலகம் படத்திற்கு பிறகு, தற்போது ராஜா ரங்குஸ்கி படத்திலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த வேடம் இதுவரை நான் நடித்ததில் எனக்கு திருப்தி கொடுத்த வேடம். அதனால், இதுவரை டப்பிங் கொடுப்பது பற்றி யோசிக்காமல் இருந்து வந்த நான், இந்த படத்தில் நான், தான் டப்பிங் பேசுவேன் என்று டைரக்டரிடம் கேட்டு முதன் முறையாக எனக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன். அந்த அளவுக்கு இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் என்னை ஈர்த்து விட்டது என்கிறார் சாந்தினி.