ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடன இயக்குனர்கள் படம் இயக்குவது இப்போதைய டிரண்டிங். பிரபுதேவா, ஹரிகுமார், காயத்ரி, ராபர்ட், உள்பட பலர் இயக்குனர்கள் ஆகிவிட்டார்கள். தற்போது அந்த வரிசையில் அடுத்து ஒரு பெண் நடன இயக்குனரும் படம் இயக்குகிறார்.
பாரதிராஜாவின் பசும்பொன் படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானவர் சொர்ணா. அதன் பிறகு இந்திய மொழிகள் அனைத்திலும் 800 படங்களுக்கு மேல் நடன இயக்கனராக பணியாற்றி உள்ளார். அவர் முதன் முறையாக இயக்கும் படம் நாதிரு தின்னா. இந்தப் படத்தில் புதுமுகங்கள் ஷப்யாச்சி, ஷ்யாம், மகி, தேஜா, ராதிகாப்ரீத்தி, ஹாரிகா, பவாணி, ஆகியோருடன் தருண் மாஸ்டர், வெள்ளரிக்கா புகழ் ராணி, விஜயலட்சுமி, நாகேஷ்வராவ், இன்னும் பலர் நடித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவயது முதல் பருவ வயது வரையிலான காலக்கட்டத்தில் நண்பர்களுக்குள் நடைபெறும் பாசம், நேசம், அன்பு, அரவணைப்பு, சுகம், துக்கம், இன்பம், துன்பம் காதல், மோதல், உரசல், ஆகிய உணர்வுகளை மையக்கருவாக கொண்டு உருவாகி உள்ள படம். கே.வி. மகாதேவன், ஷ்யாம், வந்தேமாதரம், உபேந்திரகுமார், சக்ரி முதலான இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய முரளீதர்ராகி இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.