ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யாவின் 37வது படம், அடுத்தடுத்து இணைந்து வரும் பிரபல நட்சத்திரங்களால் களைகட்டி வருகிறது. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு இணையான கேரக்டரில் மோகன்லால் நடிக்க, முக்கிய வேடங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் போமன் இரானி மற்றும் கதாநாயகியாக சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்போது இந்தப்படத்தில் நடிகர் ரவீந்தரும் இணைந்துள்ளார். எண்பதுகளில் தங்கமகன், ராம் லட்சுமண், பேர் சொல்லும் பிள்ளை என ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடித்தவர் தான் இந்த ரவீந்தர்.. அவ்வப்போது மலையாளத்தில் நடித்து வந்த இவர், கடந்த 20 வருடங்களில் தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல 2015ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த என்னும் எப்பொழும் படத்திற்கு கதை எழுதிய ரவீந்தர், சுமார் 13 வருடங்களுக்குப்பின் இந்தப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.