மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
இந்தியத் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன். தயாரிப்பாளர்களைக் கிண்டலடித்து இவர் பதிவிட்ட டுவீட் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில், தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கோபத்தைக் காட்டுவதாகவும், நாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது கொஞ்சலைக் காட்டுவதாகவும், ஒரு நாயின் புகைப்படத்தைப் போட்டு பதிவிட்டிருக்கிறார்.
இந்த டுவீட் தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. பிலிம்ஸ், சதீஷ் குமார், சந்தோஷ் சிவனுக்கே போன் செய்து ஏன் இந்த மாதிரி பதிவிட்டீர்கள் என அவரிடமே கேட்டுவிட்டார். அதற்கு சந்தோஷ் சிவனும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் டுவிட்டரில், கலையை நேசிக்க தெரியாத பணவெறி பிடித்த உன் திமிர் பிடித்த விமர்சனத்திற்கு கண்டனம். நீ யாரை சொல்கிறாய், உனக்கு வாய்ப்பு கொடுத்த விஷாலையா இல்லை லிங்குசாமியையா.? மன்னிப்பு கேள், இல்லையென்றால் உன்னை கலைத்தாய் உணரச்செய்யும் என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, டுவிட்டரில் அந்த பதிவை நீக்கிய சந்தோஷ் சிவன், "நான் பதிவிட்ட டுவீட் ஆங்கிலத்தில் பார்வேர்டாக வந்த செய்தி. பல தயாரிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நான் நீக்கிவிட்டேன். அந்த பதிவு யாரையும் குறிப்பிடவில்லை என டுவீட் செய்திருக்கிறார்.