அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஷ் சிவன், நேற்று இரவு தயாரிப்பாளர்களை கிண்டலடித்து டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும் போது கோபமாக இருப்பதாகவும், ஹீரோயின்களுக்கு சம்பளம் வழங்கும் போது கொஞ்சலாக இருப்பதாகவும் நாய் படம் ஒன்றை வைத்து பதிவிட்டிருந்தார்.
சந்தோஷ் சிவனின் சர்ச்சை டுவீட் பற்றிய கருத்து தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் வரை சம்பளம், தனி கேரவன் என ஹீரோயின்களுக்கு கொடுக்கும் அளவிலான முக்கியத்துவம் அவருக்கும் தரப்பட்டு வரும் நிலையில் அவர் இப்படி பதிவிட்டிருப்பது குறித்து முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தியாகராஜன், தனஞ்செயன், மனோபாலா, தேனப்பன், ஜேஎஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்களாம்.
தயாரிப்பாளர்களுக்குள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பிலும் பல தயாரிப்பாளர்கள் இது குறித்து கொந்தளித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.