அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஷ் சிவன், நேற்று இரவு தயாரிப்பாளர்களை கிண்டலடித்து டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும் போது கோபமாக இருப்பதாகவும், ஹீரோயின்களுக்கு சம்பளம் வழங்கும் போது கொஞ்சலாக இருப்பதாகவும் நாய் படம் ஒன்றை வைத்து பதிவிட்டிருந்தார்.
சந்தோஷ் சிவனின் சர்ச்சை டுவீட் பற்றிய கருத்து தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் வரை சம்பளம், தனி கேரவன் என ஹீரோயின்களுக்கு கொடுக்கும் அளவிலான முக்கியத்துவம் அவருக்கும் தரப்பட்டு வரும் நிலையில் அவர் இப்படி பதிவிட்டிருப்பது குறித்து முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தியாகராஜன், தனஞ்செயன், மனோபாலா, தேனப்பன், ஜேஎஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்களாம்.
தயாரிப்பாளர்களுக்குள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பிலும் பல தயாரிப்பாளர்கள் இது குறித்து கொந்தளித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.