ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஷ் சிவன், நேற்று இரவு தயாரிப்பாளர்களை கிண்டலடித்து டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும் போது கோபமாக இருப்பதாகவும், ஹீரோயின்களுக்கு சம்பளம் வழங்கும் போது கொஞ்சலாக இருப்பதாகவும் நாய் படம் ஒன்றை வைத்து பதிவிட்டிருந்தார்.
சந்தோஷ் சிவனின் சர்ச்சை டுவீட் பற்றிய கருத்து தயாரிப்பாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 கோடி ரூபாய் வரை சம்பளம், தனி கேரவன் என ஹீரோயின்களுக்கு கொடுக்கும் அளவிலான முக்கியத்துவம் அவருக்கும் தரப்பட்டு வரும் நிலையில் அவர் இப்படி பதிவிட்டிருப்பது குறித்து முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தியாகராஜன், தனஞ்செயன், மனோபாலா, தேனப்பன், ஜேஎஸ்.சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்களாம்.
தயாரிப்பாளர்களுக்குள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பிலும் பல தயாரிப்பாளர்கள் இது குறித்து கொந்தளித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.