'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் தனது குழுவினருடன் இசை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரிலும் செப்., 8-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அங்குள்ள டல்லாஸ் கர்ட்டஸ் கல்வெல் சென்டரில் பிரம்மாண்டமாய் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ரஹ்மான். வயது வித்தியாசமின்றி வந்திருந்த அனைவரையும் புல்லரிக்க வைத்தார். சில பாடல்கள் அரங்கத்தையே அமைதியாகியது, பல பாடல்கள் இளைஞர்களை உட்காரவிடாமல் துள்ளிக் குதிக்க வைத்தது.
மனோ, உதித் நாராயண், ஹரிச்சரண், ஜாவித் அலி, ரஞ்சித் பிரோட், நீத்தி மோகன், ஜனிடா காந்தி மற்றும் லிண்டா ஆகியோர் ரஹ்மானின் இசை குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று படைப்பதால் தானோ என்னவோ, இறைவன் ரஹ்மானுக்கு மேலும் மேலும் புகழ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என இன்னிசை மழையில் நனைந்த ஒருவர் தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்-