பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் தனது குழுவினருடன் இசை சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லாண்டா, வாஷிங்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியவர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரிலும் செப்., 8-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
அங்குள்ள டல்லாஸ் கர்ட்டஸ் கல்வெல் சென்டரில் பிரம்மாண்டமாய் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் ரஹ்மான். வயது வித்தியாசமின்றி வந்திருந்த அனைவரையும் புல்லரிக்க வைத்தார். சில பாடல்கள் அரங்கத்தையே அமைதியாகியது, பல பாடல்கள் இளைஞர்களை உட்காரவிடாமல் துள்ளிக் குதிக்க வைத்தது.
மனோ, உதித் நாராயண், ஹரிச்சரண், ஜாவித் அலி, ரஞ்சித் பிரோட், நீத்தி மோகன், ஜனிடா காந்தி மற்றும் லிண்டா ஆகியோர் ரஹ்மானின் இசை குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று படைப்பதால் தானோ என்னவோ, இறைவன் ரஹ்மானுக்கு மேலும் மேலும் புகழ் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என இன்னிசை மழையில் நனைந்த ஒருவர் தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்-