தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி, எமி ஜாக்சன், அக்சய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள பிரம்மாண்ட படம் 2.0. முன்பு அவர் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம். ரூ.545 கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் நவ., 29-ம் தேதி வெளிவர இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. அது பற்றிய ஒரு பார்வை...
டிரைலரின் ஆரம்பத்தில் டைட்டில் கார்ட் முடிந்தவுடன் சிட்டுகுருவிகள் செல்போன் கோபுரத்தை சுற்றி பறக்கின்றன. பின்னர் மக்கள் கையில் வைத்திருக்கும் செல்போன்கள் மாயமாகிறது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் நடப்பதாகவும், இதுகுறித்து போலீசார் குழப்பத்தில் இருப்பதாகவும் டெலிவிஷனில் செய்தி சொல்கிறார்கள்.
உடனே விஞ்ஞானிகள் அவசரமாக கூடி இது என்ன? இதற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்புகின்றனர். அப்போது டாக்டர் வசீகரனான ரஜினிகாந்த், “இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. இதை எதிர்த்து நிற்க ஒரு 'சூப்பர் பவர்' வேணும்” என்கிறார். “அப்போ என்ன பண்ணலாம்கிறீங்க” என்று மற்றவர்கள் கேட்டதும் உடனே “சிட்டி த ரோபோட்" என ரஜினி சொல்ல சிட்டி ரோபோ அறிமுகம் செய்யப்படுகிறது.
ராட்சத கழுகின் தோற்றத்தில் கட்டடங்களை உடைத்து திகிலூட்டும் அக்சய் குமார் நிழல் நிலத்தில் விழும்போது சிட்டி ரோபோ அதை அண்ணாந்து பார்த்தவாறு அதிரடியில் இறங்குகிறார். கால்பந்தாட்ட மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரோபோக்கள் வருகின்றன. அவை அனைத்தும் செல்போன்களால் உருவானவை. அப்போது சிட்டி கையில் நூறு துப்பாக்கிகளை வைத்து ஸ்டைலாக சுடுகிறார். இறுதியில் ரோபோ ரஜினி 'குக்கூ' என்று கூறி சிரிப்பது போன்று டீசர் முடிகிறது.
1 நிமிடம் 30 வினாடிகள் இந்த டிரைலர் ஓடுகிறது. கிராபிக்ஸ் காட்சிகளே பெரும்பாலும் டீசரை ஆக்கிரமித்துள்ளன. இந்த டீசர் தியேட்டர்களில் 3டி வடிவில் திரையிடப்பட்டது. யுடியூப்பில் 2டியில் வெளியானது.
படம் பற்றி டீசரிலிருந்து தெரிவது என்ன?
படத்தில் இன்று மக்கள் கையில் இருக்கும் செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. செல்போன்களில் உள்ள பவரைக் கொண்டே வில்லன் அக்சய் குமார் ரோபோக்களை உருவாக்குகிறார். இறுதியில் அவர் சிட்டியையும் வில்லனாக மாற்றுகிறார் படத்தின் டைட்டில் கூட செல்போன்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.