இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் கூட புதிய படங்களின் வெளியீடுகள் என்றாலே வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தான் நடக்கும். ஆனால், சமீப காலமாக அந்த வெள்ளிக்கிழமை வெளியீடுகள், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
புதிய படங்களை உடனுக்குடன் பார்க்க வேண்டும் எனப் பலர் நினைப்பதால் இப்படி மாற்றி வருகிறார்களா அல்லது வேறு ஏதாவது புதிய சென்ட்டிமென்ட்டை கடைபிடிக்கிறார்களா என்பதே புதிராகத்தான் உள்ளது. அஜித், சாய்பாபா பக்தர் என்பதால் அவருடைய பட விஷயங்களை வியாழக்கிழமைகளில் வெளியிடுவதை சமீப காலமாக கடைபிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று.
இன்று வியாழக்கிழமை, வினாயகர் சதுர்த்தி என்பதால் 'சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அடுத்து வரும் வாரங்களிலும் படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியாக உள்ளது ஆச்சரியமானதுதான்.
செப்., 27ம் தேதி 'செக்கச் சிவந்த வானம்' படமும், அக்டோபர் 4ம் தேதி '96' படமும் வெளியாக உள்ளன. இந்த வியாழக்கிழமை சென்டிமென்ட் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமாகப் போகிறதா என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும். அடுத்தவாரம் செப்., 20-ம் தேதி சாமி ஸ்கொயர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.