திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் காலா. நிலம் எங்கள் உரிமை என உரக்க சொன்னது இப்படம். எட்டு வழிச்சாலைக்கு விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வரும் வேலைகளை செய்து வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத்திய பிரதமர் அலுவலகமும், சட்ட அமைச்சகமும் இணைந்து நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்கள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரும் காலா படத்தை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். நிலம் இல்லாதவர்களின் துயரத்தை நீதிபதிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி கேட்டுக் கொண்டுள்ளேன் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது தெரியவில்லை.