ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் சதுரங்க வேட்டை-2. என்.வி.நிர்மல்குமார் இயக்கி உள்ளார். மனோபாலா தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையிலும் படம் இன்னும் வெளியாகவில்லை. அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி இருப்பதால் அவர் டப்பிங் பேசவில்லை என்றும், அதனால் படம் தாமதமாவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அரவிந்தசாமி சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பாளர் மனோபாலா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சதுரங்க வேட்டை 2" படத்தில் நடித்தற்காக தயாரிப்பாளர் மனோபாலா ஒரு கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். அதை வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், விசாரணையை வருகிற 20ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. அரவிந்த்சாமி சம்பள பாக்கிக்காக வழக்கு தொடர்ந்திருந்தாலும் படத்தை தடை செய்ய கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"அரவிந்த்சாமிக்கு ஒரு கோடி சம்பள பாக்கி இருப்பது உண்மை தான். அவர் டப்பிங் பேசி முடித்துக் கொடுத்தால் பட வெளியீட்டுக்கு முன்பே சம்பள பாக்கியை கொடுத்து விடுவேன். அதற்கு அவர் ஒப்புக் கொண்டு தான் இருந்தார். இப்போது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரில் கோர்ட்டுக்கு சென்றுள்ளார். கோர்ட்டில் என் தரப்பு விளக்கத்தை கொடுப்பேன்" என்கிறார் மனோபாலா.