ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜமவுலி இயக்கத்தில், நானி, சுதீப், சமந்தா நடித்து வெளியான படம் நான் ஈ. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கிய படங்களில் இடம்பெறவில்லை சமந்தா. ஆனபோதும், தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து அவர் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து சமந்தா அளித்துள்ள ஒரு பேட்டியில், ராஜமவுலி இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அவர், இதுவரை என்னை அணுகவில்லை. அது மனதளவில் சோகத்தை அளித்துள்ளது.
ஆனபோதும் ராஜமவுலி படத்தில் நடிப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் வதந்திகள் தான். அதை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் சமந்தா.